உதயநிதி ஸ்டாலின் கைது சட்டவிரோதம் – என்.ஆர். இளங்கோ

திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என திமுக மூத்த வழக்கறிஞரும், சட்டத்துறை செயலாளருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவல்துறையினர் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வேண்டுமென்றே மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் நாளை சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சட்டத்தின் மூலம் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் அவரைக் கைது செய்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என நீதிமன்றத்தில் வாதிட்டதாக என்.ஆர். இளங்கோ கூறினார். தஞ்சாவூர் காவல்துறையினர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், விசாரணையின்போது காவல்துறையின் அப்பட்டமான அடக்குமுறையையும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் உதயநிதியை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததாகவும், அவர் பேசியதன் உள் அர்த்தத்தைத் திரித்து பரப்பியதாகவும் என்.ஆர். இளங்கோ குற்றம்சாட்டினார். முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாகவும், தஞ்சையில் உதயநிதி பேசியதைச் சூழலில் இருந்து வெட்டி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்றிரவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இன்று காலை உதயநிதியை கைது செய்ய வந்ததாகவும் அவர் கூறினார். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சித் தலைவரை முடக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த கைது நடவடிக்கையானது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி என்றும் அவர் விமர்சித்தார். நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது சட்டத்தின் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது போன்ற செயல்கள் ஜனநாயக நாட்டில் நடைபெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற அத்துமீறல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version