தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளியதாகவும், கடனில் தத்தளிப்பதாகவும் தவறான கருத்துக்களை பரப்பிய முதலமைச்சர், தற்போது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகள் என பட்டியலிட்டு பேசியுள்ளார். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது, இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சி என முதலமைச்சர் பேசியுள்ளார்.
இந்த சாதனைகள் அனைத்தும் முதலமைச்சரின் ஒரு மாத கால #SofaModel ஆட்சியின் போது நடந்தவையா? அல்லது 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமாக பதிவிட்டுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், தற்போது நீட் விலக்கு கேட்டு அவர் பேசியதற்கே மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லி வரை சென்றும், நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவரது புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை குறித்து வாய் திறக்காமல், 'நமக்கெதுக்கு வம்பு' என்று மௌனமாக திரும்பி வந்துள்ளார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நமது கழக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது #SofaModel அரசு. பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி மக்களை ஏமாற்றி பெற்றிருக்கும் இந்த போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!