MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!

தமிழ்நாடு

ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!

Admin
Last updated: மே 8, 2026 12:37 மணி
Admin
Share
SHARE

கலைக்கப்பட்ட என்.டி.ராமாராவ் ஆட்சி..! 

தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் என்.டி.ராமாராவ், 1982 ஆம் ஆண்டு  தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். அப்போது, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருந்தபோதிலும், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரா சட்ட மன்ற தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 46.3% வாக்குகளைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதுவே ஒரு அறிமுகக் கட்சியின் அதிகபட்ச வாக்கு சதவீதமாக பார்க்கப்படுகிறது. 

1984-ஆம் ஆண்டு என்.டி.ஆர் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், நிதி அமைச்சராக இருந்த நதேந்த்லா பாஸ்கரராவ், "தனக்குதான் கட்சி எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்றும், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" என, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் சமர்பித்தார். இதனை தொடர்ந்து, அப்போது ஆளுநராக இருந்த தாக்கூர் ராம் லால், என்.டி.ஆர் ஆட்சியை கலைத்ததோடு, பாஸ்கரராவிற்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த என்.டி.ஆர், அமெரிக்காவில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார். பின்னர், தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை அழைத்து கொண்டு டெல்லி சென்ற என்.டி.ஆர், குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். 

குடியரசுத் தலைவரை சந்தித்த என்.டி.ஆர், "பெரும்பான்மை இல்லையென்ற நிலை வந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டுமே தவிர, ஆட்சியை கலைக்கக் கூடாது" என வலியுறுத்தினார். என்டிஆரின் நீக்கத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இது நாட்டையே உலுக்கியது. 

இதனையெல்லாம் கருத்தில் கொண்ட அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், மீண்டும் என்டிஆர் ஆந்திராவில் ஆட்சி செய்யும் படி செய்ததோடு, ஆளுநர் ராம் லாலை மாற்றி, சங்கர் தயாள் சர்மாவை புதிய ஆளுநராக நியமித்தார். இப்படி ஆளுநரையே மாற்றிய பரபரப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. 

“நான் என்ன குற்றம் செய்தேன்” – எம்.ஜி.ஆர் 

எம்.ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக தனிப்பெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 37 இடங்களை திமுக – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதனால், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான நெருக்கடியை கொடுத்தது. 

"மக்களவை தேர்தலில் தோற்றுப்போன கட்சிக்கு மாநிலத்தை ஆளும் தகுதி இல்லை" எனக் கூறி, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மத்திய அரசு, ஆளுநர் மூலம், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவுவை பயன்படுத்தி எம்ஜிஆர் அரசை கலைத்தது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால்   “நான் என்ன குற்றம் செய்தேன்..” என்ற ஒற்றை கேள்வியுடன் தேர்தலை எதிர் கொண்டு மறுமுறை எம்ஜிஆர் ஆட்சியை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், விஜய் என சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து முதலமைச்சர் ஆன மூன்று, மூன்றெழுத்து நடிகர்களுக்கும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நெட்டின்சன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BIG STORIES
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆளுநரை மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறார் விஜய்..!
Next Article தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு…
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரத்த சேகரிப்பு தரவுகள்

2025-ல் 1.58 கோடி யூனிட் ரத்தம் சேகரிப்பு இலக்கு

2025-க்குள் நாட்டின் ரத்த சேகரிப்பை 1.58 கோடி யூனிட்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 9, 2026

மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்

மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல்…

ஆகஸ்ட் 9, 2026

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி

டெல்லி ஐஐடி-யில் நடைபெற்ற 57-வது பட்டமளிப்பு விழாவில்…

ஆகஸ்ட் 9, 2026

மின்சார அடுப்புகள்: இறக்குமதி வரி குறைப்புக்கு மத்திய அரசு பரிசீலனை

இந்தியாவில் மின்சார அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, இறக்குமதி…

ஆகஸ்ட் 9, 2026

79 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்து வசதி பெற்ற கிராமம்: குர்தல், கேரோட் மக்கள் கொண்டாட்டம்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குர்தல்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் விலை திடீர் ஏற்றம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி!

சென்னையில் இன்று காலை குறைந்த தங்கம் விலை, பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மாணிக்கம் தாகூர்

பிரதமர் மோடியை நோக்கி ஏன் கேள்வி எழுப்பவில்லை என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் திசைதிருப்பும் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர்…

1 Min Read
செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அவர் மீதுள்ள பல்வேறு…

2 Min Read
கோழி விற்பனை நிறுத்த அறிவிப்பு குறித்த செய்தி
தமிழ்நாடு

கோழி விற்பனை நிறுத்தம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் தட்டுப்பாடு அபாயம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31 ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?