திருச்சியில் போதை ஊசியால் இளைஞர் பலி: அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்மந்தை காலனியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்பவர், கழிப்பறைக்குச் சென்று போதை ஊசி செலுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். த.வெ.க. ஆட்சியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று, நண்பர்களுடன் போதை ஊசி பயன்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version