சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், 'புதிய ஆட்சியில் போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துள்ளதை தெளிவாக பார்க்கிறோம்' என்று தெரிவித்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னைக்குள் இருந்து ஆம்னி பேருந்தில் பயணிக்க மக்கள் கிளாம்பாக்கத்திற்கு வாடகை கார்களில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏராளமான வாடகை வாகனங்கள் கிளாம்பாக்கத்தை நோக்கி செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அன்பழகன் கூறினார். வாகன பேன்சி எண்ணுக்கு விண்ணப்பிக்க இடைத்தரகருக்கு பணம் தரும் நிலை தவெக அரசில் இல்லை என்றும், புதிய ஆட்சியில் போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை திறக்க வேண்டியும், போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் கோரிக்கை விடுத்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர்.