திருச்சிராப்பள்ளி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) காலியாக உள்ள 30 பணியிடங்களுக்கு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான தேர்வு கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் ரூ.17,500 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் / ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு II ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பிளஸ் டூ தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும், 10 ஆம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் (ஆண்) / இன்ஸ்பெக்டர் / சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பில் 2 வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்ப கட்டணம் குறித்த விவரங்கள்: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 22.07.2026. விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2026. இந்த தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லுரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி.-620 020. இந்த முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
கடைசி நாள்: 07.08.2026, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, அரசு வேலையில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

