பயணிகளின் நலன் கருதி, திருநெல்வேலி மற்றும் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் மூலம் பயண நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து ஜூலை 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06070), அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 10, 17, 24, 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06069), அன்றைய நள்ளிரவு 1 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.