ஊரான் பலத்தில் வந்தவருக்கு கர்வம் தேவையில்லை – துரைமுருகன்

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தமிழக முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 'பேச்சில் கண்ணியம் வேண்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசுவது முதல்வருக்கு முறையல்ல' என்று விமர்சித்துள்ளார். மேலும், 'சொந்த பலத்தில் அல்லாமல், ஊரான் பலத்தில் வந்தவர்களுக்கு இவ்வளவு கர்வம் தேவையில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு கரூர் அருகே நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் விஜய் பேசியிருந்தார். அப்போது, 'கரூர் போலீசார் நினைத்திருந்தால் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். அரசியல் ஆதாயம் தேடிய மு.க.ஸ்டாலின், என் குடும்ப உறவுகளை இழந்து வலியிலிருந்த என் மீதே பழியைப் போட்டார். நான் ஓடி ஒளிந்துவிட்டதாகக் கூறினார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?' என்று ஆவேசமாக அவர் பேசியிருந்தார்.

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 'தமிழக முதல்வர்கள் எப்போதும் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, அனுசரணையாகவே பேசி வந்துள்ளனர். ஆனால், முதல்வர் விஜய் பேசுவது அப்படி இல்லை. எடுத்தோம் கவிழ்ந்தோம் என்று பேசுவது முதல்வருக்கு அழகல்ல' என்று கூறினார்.

மேலும், 'வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல' என்று கண்ணதாசன் கூறியதை மேற்கோள் காட்டிய துரைமுருகன், 'இந்த வெற்றி நிலையானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எங்களை விட்டால் ஆளில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் காங்கிரஸ் தோற்கவில்லையா? அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். இரண்டையும் ஒன்றாக பாவித்து, அடுத்த முறை மக்களின் மனதை கவர்கிறவன்தான் உண்மையான அரசியல்வாதி' என்றும் தெரிவித்தார்.

'ஏதோ வந்துவிட்டோம் என்பதற்காக பேசக்கூடாது. அதுவும் சொந்த பலத்தில் அல்லாமல், ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் தேவையில்லை' என்று அவர் தனது பேச்சை முடித்துக் கொண்டார். இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் பேச்சு மற்றும் அதற்கு துரைமுருகன் அளித்த பதில், எதிர்வரும் காலங்களில் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version