திருவள்ளூர் அம்மோனியா கசிவு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 14 பேரும் பெண்களாவர். இவர்களில் இருவர் 15 வயதுடைய சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 13 பேர் இன்னும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் கோமா நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுவரை, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்களும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்களும் இந்த அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

திருவள்ளூர் அம்மோனியா கசிவு: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

திருவள்ளூர் கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள புனித பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில், ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கூலிங் பைப்பில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தால், தொழிற்சாலையில் தங்கியிருந்த சுமார் 80 பேர் பாதிக்கப்பட்டனர். வாயுக்கசிவு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. இந்த விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 பேர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 29 பேர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர், தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 77 பேர் பாதிக்கப்பட்டனர்.

வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 2 பேர் தவிர்த்து, சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் 2 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன்படி, இந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 67 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 9 பேரில் 7 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள், 2 பேர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version