திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளியான காணொளி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'திருக்கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட திரு. ஜோசப் விஜய் அரசு!' என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், 'இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? திரு. ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, முறுக்கு பாக்கெட் உற்பத்தித் தேதி குறித்து கேள்வி எழுப்பிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ், தற்போது எழுந்துள்ள இந்தப் புகாரையும் எளிதாகக் கடந்து செல்லக் கூடாது என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். உடனடியாக இது குறித்து தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் திரு. விஜய் அவர்கள் தலைமையிலான அரசை, திருக்கோவில் அன்னதானத்தின் தரத்தை உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.