‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இப்பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர் பங்கேற்று கொண்டனர். விஜய்யின் தாய், தந்தை, உறவினர்கள், நடிகை த்ரிஷா ஆகியோரும் பங்கேற்று கொண்டனர்.

விழாவில் முதலமைச்சராக பதவியேற்றபின் பேசிய விஜய்,

திட்டங்களை நிறைவேற்ற எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் கவனமாக இருப்பேன். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றுமுதல் தொடங்கும். சட்டம், ஒழுங்கை எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். அடிப்படை தேவைகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட எடுத்துக்கொள்ள மாட்டேன்.

மக்கள் பணத்தில் இருந்து 1 ரூபாய் எடுக்க மாட்டேன். இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான். தப்பு பண்ணவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி. என் அரசில் என் கூடவே இருப்பவர்களாக இருந்தாலும் சரி விடமாட்டான். ஒருவேளை யாருக்காவது நாம ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம்’ என ஒரு எண்ணம் இருந்தால், இப்போதே இந்த நிமிடமே அதை அழித்துவிடுங்கள்.

இங்கு ஒரேமையம்தான், அதுவும் என் தலைமையிலானது மட்டும்தான். இங்கு ஒரு பவர் சென்டர், அங்கு ஒரு பவர் சென்டர் என எதுவும் இல்லை.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version