MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்

தமிழ்நாடு

717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்

Admin
Last updated: மே 12, 2026 2:14 மணி
Admin
Share
SHARE

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்பு சிறப்புப்படை, சிங்கப் பெண் சிறப்புப்படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர், இளைஞர், மாணவர் அமைப்புகளும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கவை.

அதேநேரம், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பகுதிகளில் செயல்படும் எஃப் எல் 2 மதுபானக் கடைகள் உள்ளிட்ட மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அரசின் நடவடிக்கை என்ன என்பது அரசாணையில் தெளிவுபடுத்தப்படவில்லை. அவைகளும் மூடப்பட்டால் மட்டுமே அரசின் நோக்கம் முழுமையடையும். இந்த மதுபானக் கடைகள் மூடப்படுவதோடு, அரசு படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் திசையில் செயல்பட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்படும்போது கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்பனை தலைதூக்காமல் தடுக்க அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல, குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

மேலும், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சுமார் 3500 டாஸ்மாக் பணியாளர்களின் வேலைவாய்ப்பையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தக் கடைகள் மூடப்படுவதற்கு முன்பாக, அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் அவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரவீணா ரவி – மலையாள இயக்குனர் தேவன் ஜெயக்குமார் திருமணம்
Next Article ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூருவில் நீச்சல் குளங்களுக்கு குடிநீர் பயன்படுத்த தடை விதிப்பு

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், நீச்சல்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாடு கிராம வங்கியின் நிகர லாபம் ரூ.622.79 கோடி உயர்வு

2025-2026 நிதியாண்டில் தமிழ்நாடு கிராம வங்கியின் நிகர லாபம் ரூ.622.79 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வணிகம் 14.19% வளர்ச்சி அடைந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணிகள் ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு…

2 Min Read
தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பெ.சண்முகம்…

1 Min Read
தமிழ்நாடு

அமமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த நிர்வாகிகள்: திருத்தணியில் பரபரப்பு!

திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக நிர்வாகிகள், எஸ்.வேதாச்சலம் தலைமையில் ராஜினாமா செய்து, தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?