தவெக அரசு இதை செய்தால் பொறுப்பில் இருந்து விலகுவேன் – தங்கம் தென்னரசு சவால்

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், முந்தைய திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த திமுகவின் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக ஆட்சியின் முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.20 லட்சமாக உயரும் என்றும், திமுக ஆட்சியில் வாங்கிய கடனை விட குறைவாக கடன் பெற்று திட்டங்களை நிறைவேற்றினால் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் சவால் விடுத்துள்ளார்.

புதிய திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறுவதை தவிர்க்கவே தவெக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். தவெக தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ6 லட்சம் கோடி தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு த.வெ.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன் என்றும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், முந்தைய ஆட்சிகள் பற்றி தற்போதைய வெள்ளை அறிக்கையில் இல்லாதது யாரை காப்பாற்றுவதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது வாங்கிய கடனை விட, தவெக ஆட்சியில் குறைவாக கடன் பெற்று திட்டங்களை நிறைவேற்றினால், நான் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்று தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version