தமிழ்நாடு அரசு, தாய்மாமன் தங்க மோதிர திட்டம் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதுடன், இதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்து அரசாணையும் வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசே விளக்கமளித்துள்ளது. முதலாம் குழந்தையாக இருந்தாலும் சரி, இரண்டாம் குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ அல்லது தடைகளோ இன்றி இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, குழந்தைகள் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாகச் சரிந்திருப்பதைக் கருத்தில் கொண்டே தமிழ்நாடு அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் தங்க மோதிரம் கிடைக்குமா என்ற கேள்விக்கு, 'இல்லை' என்பதே பதிலாக உள்ளது. இத்திட்டத்தில் பல தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் நடந்திருக்க வேண்டும்.
தாய்மார்கள் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) அமைப்பில் RCH ID உடன் கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பெற்றெடுத்த அனைத்து தாய்மார்களும் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். எனவே, தகுதியான தாய்மார்கள் அனைவரும் இந்த முக்கிய அறிவிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், குடும்பங்களுக்கு நிதி ரீதியாக உதவவும் கொண்டுவரப்பட்டுள்ளது. தகுதியான தாய்மார்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் செயல்பாடு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

