MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாடு நாள்: ஜூலை 18 அல்ல, நவம்பர் 1 தான் – அன்புமணி ராமதாஸ் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாடு நாள்: ஜூலை 18 அல்ல, நவம்பர் 1 தான் – அன்புமணி ராமதாஸ் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்நாடு நாள்: ஜூலை 18 அல்ல, நவம்பர் 1 தான் – அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழ்நாடு

தமிழ்நாடு நாள்: ஜூலை 18 அல்ல, நவம்பர் 1 தான் – அன்புமணி ராமதாஸ் கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 10:29 காலை
Fernandez
Share
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
SHARE

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதில் என்ன நியாயம் உள்ளது என்றும், நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு நாளாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர், ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளையொட்டி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழியின் பெருமை மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு குறித்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், வெற்றி பெறுவோருக்கு தலா ரூ.50,000, ரூ.30,000, ரூ.20,000 பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் பெருமைகளை பரப்புவதற்கான இத்தகைய பணிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சி தொடர்வதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் முறையே கர்நாடகம் நாள், கேரளம் நாள், ஆந்திரம் நாள், புதுச்சேரி நாள் என நவம்பர் 1-ம் தேதியை கொண்டாடி வருகின்றன. அதேபோல், நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது. தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையும் இதுவாகவே இருந்துள்ளது.

இதையேற்று, 2019-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தார். ஆனால், 2021-ம் ஆண்டில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், சம்பந்தமே இல்லாமல் ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இது வரலாற்றைத் திரிக்கும் செயல் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜூலை 18-ம் தேதிக்கு சிறப்புகள் உண்டு என்றாலும், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் தகுதி அந்த நாளுக்கு இல்லை. இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட மாநிலம், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிரிக்கப்பட்ட பின்னர், பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. 1967-ம் ஆண்டில் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அதே ஆண்டில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு ஜூலை 18-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாற்றின்படி பார்த்தால், ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட என்ன நியாயம் உள்ளது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூலை 18 என்பது தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்ட நாள்தான். ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாகக் கொண்டாட முடியாது. இது வரலாற்றைத் திரிக்கும் அபத்தமான செயல். திமுக ஆட்சியில் தவறான வழிகாட்டுதல் அல்லது உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னும் அதே வரலாற்றுத் திரிபை பின்பற்றுவதும், நியாயப்படுத்துவதும் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு செய்யப்படும் துரோகம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு நாள் என்றால் அது நவம்பர் ஒன்றாம் நாள்தான். அது தான் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாறாக, ஜூலை 18-ம் நாளை தமிழ்நாடு என்று அழைப்பதும், அதை நிலைநிறுத்தும் வகையில் தவறான வரலாற்றின் அடிப்படையில் பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதும் ஏற்க முடியாதவை. இந்த அபத்தத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். தேவைப்பட்டால் தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், எல்லைப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து பேசி தமிழ்நாடு நாள் எது? என்பதை தீர்மானிக்க வேண்டும்; மாணவச் செல்வங்களுக்கு பெருமைமிக்க உண்மை வரலாற்றை போதிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anbumani RamadossJuly 18November 1Tamil Nadu Dayஅன்புமணி ராமதாஸ்தமிழ்நாடு நாள்தமிழ்நாடு வரலாறுநவம்பர் 1பாட்டாளி மக்கள் கட்சிஜூலை 18
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காட்சி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு: அதிர்ச்சி வாடிக்கையாளர்கள்
Next Article திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கொலை நடந்த இடம் திருவள்ளூரில் பட்டப்பகலில் பெண் கொலை: 15 சவரன் நகை கொள்ளை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

ஜூலை 14, 2026

ஹார்முஸ் ஜலசந்தி: இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன்…

ஜூலை 14, 2026

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவன் கைது

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கூட்டுறவு பால் உற்பத்தியில் புதிய கண்காணிப்பு அதிகாரி நியமனம்!

தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் தொடரும் நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

சேலம் வழியாக செல்லும் 2 ரயில்கள்: முக்கிய மாற்றம் அறிவிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் இரண்டு ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?