தமிழகத்தில் ஒரே நாளில் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திடீர் இடமாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பொறுப்பேற்கும் அதிகாரிகள் விவரம்: சேலம் எஸ்.பி-யாக குத்தாலிங்கம், திருவண்ணாமலை எஸ்.பி-யாக கார்த்திகேயன், கடலூர் எஸ்.பி-யாக விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் எஸ்.பி-யாக சாய் பிரனீத், திண்டுக்கல் எஸ்.பி-யாக ஜெயகுமார், விழுப்புரம் எஸ்.பி-யாக மதிவானன், விருதுநகர் எஸ்.பி-யாக விமலா, தர்மபுரி எஸ்.பி-யாக அருண் கபிலன், கிருஷ்ணகிரி எஸ்.பி-யாக அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாமக்கல் எஸ்.பி-யாக யாதவ் கிரிஷ் அசோக், மதுரை எஸ்.பி-யாக தேவநாதன், நாகப்பட்டினம் எஸ்.பி-யாக கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா, தேனி எஸ்.பி-யாக கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், நெல்லை எஸ்.பி-யாக விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி, மயிலாடுதுறை எஸ்.பி-யாக புக்யா ஸ்னேக பிரியா, திருப்பூர் எஸ்.பி-யாக ஷ்ரிஸ்டி சிங், அரியலூர் எஸ்.பி-யாக செல்வகுமார் ஆகியோர் புதிய எஸ்.பி-க்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
இந்த பரவலான இடமாற்றங்கள், மாவட்டங்களின் நிர்வாகத்திலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை காவல்துறை சீரமைப்பின் ஒரு பகுதியா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.