மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல்வாதிகள் கட்சிகள் மாறுவது சகஜம் என்றாலும், கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக, ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் சகித்துக்கொள்ள முடியாமல், தற்போதைய ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், 'விரைவில் தேர்தல் வரும், தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் வரும்' என்று பொதுவெளியில் பேசியதன் பின்னணி இப்போதுதான் புரிகிறது என்றும் பெ.சண்முகம் குறிப்பிட்டார். எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பதற்காகவே, சட்டமன்ற உறுப்பினரை விலை பேசியதாக தற்போது வெளியாகியுள்ள செய்தி அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல்வாதிகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைவது என்பது எப்போதுமே சகஜமான ஒரு விஷயம்தான் என்று பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஆளும்கட்சி மாறுகின்ற காலகட்டங்களில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு பலர் மாறுவது நிறைய முறை நடந்திருக்கிறது என்றும், அதுபோல் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் வேறு கட்சியில் சேருவது வேறு என்றும் அவர் கூறினார்.
ஆனால், அதற்கு மாறாக ஒருவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி வாங்குவதையெல்லாம் அரசியல் ரீதியாக நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எப்படியாவது தற்போதுள்ள இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றும், தாங்கள் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அநாகரிகமான முறையில்தான் பின்னணியில் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது என அவர் குற்றம் சாட்டினார்.