MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?

தமிழ்நாடு

AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?

Admin
Last updated: மே 11, 2026 6:50 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு அ.தி.மு.க. கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது மீண்டும் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் இன்றி, சட்டப்பேரவை அ.தி.மு.க. குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அ.தி.மு.க. மொத்தத்தில் 169 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், அ.தி.மு.க. கட்சி வெறும் 47 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் அ.தி.மு.க. கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாமல் போனது, எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து தேர்தலில் அக்கட்சி சந்தித்து வரும் தொடர் தோல்விகள் மற்றும் த.வெ.க. ஆட்சி அமைப்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் ஆட்சியிலும் பங்கேற்கலாம், சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினரை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் குழு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் வீட்டுக்குச் சென்று பேசினர். இருப்பினும், சி.வி. சண்முகம் தரப்பு மூத்த நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன், எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராக ஆதரவு தெரிவித்து அவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.-க்கள் பதவியேற்பு இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் மொத்தமாக உள்ள 47 எம்.எல்.ஏ.-க்களில் 35-க்கும் மேற்பட்டோர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.-க்கள் என சுமார் 60 சதவீதம் பேர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணி பக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு தற்போது சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்பு
Next Article பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தேர்தல் வரை மக்கள் பிரதிநிதியாக…

2 Min Read
நாகப்பட்டினம் சாலை விபத்து: ஹெல்மெட் கழற்றிய வாலிபர் உயிரிழப்பு
தமிழ்நாடு

நாகப்பட்டினம்: ஓடும் பைக்கில் ஹெல்மெட் கழற்றிய வாலிபர் பலி

நாகப்பட்டினம் அருகே, ஓடும் பைக்கில் ஹெல்மெட் கழற்றிய வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்து, கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தேர்தல் முடிந்தது; இனி வாழ்க்கை முன்னேற்றப் பயணம் தொடங்கட்டும்: இளைஞர்களுக்கு தனியார் நிறுவன நிறுவனர் அறிவுரை

இளைஞர்கள் அரசியலை அறிந்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையை மறந்து அரசியலில் முழுவதும் மூழ்கி விடக்கூடாது. இளைஞர்களின் நேரம் வீணாகக் கூடாது. சமூக வலைத்தளங்களில் மூழ்கி விடாமல், வாழ்க்கை…

3 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சீமா அகர்வால், தினகரன், சந்தீப் மிட்டல் ஆகியோர் புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?