சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் தொடக்க விழா நடைபெற உள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்த விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்த அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும். பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் இந்த சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொடக்க விழாவில், சிங்கப்பெண்களின் பங்கு, அரசின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் மற்றும் ஆட்சி சார்ந்த முக்கிய செய்திகளை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
முன்னதாக, கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்த தொடக்க விழா திட்டமிடப்பட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நாளை விழா நடைபெற உள்ளது.