நடிகை சிம்ரன், தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார்.
பல வருடங்கள் திரையில் இணைந்து பணியாற்றிய பிறகு முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக சிம்ரன் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டதாகவும், பலரையும் கவர்ந்த அவரது அன்பு, பணிவு, நேர்மை அப்படியே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான முதலமைச்சர் விஜய்யின் பேரார்வமும், தொலைநோக்குப் பார்வையும் ஊக்கமளிப்பதாகவும் நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவர் தமிழகத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் இவ்வேளையில், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரைத்துறையிலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நடிகை சிம்ரனின் ஆதரவு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.