MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தமிழ்நாடு

பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin
Last updated: June 29, 2026 1:34 pm
Admin
Share
SHARE

ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ஷீலா மேரி, தனது உறவினர் பிரபு மணி மூலம் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்கக் காசுகள் வாங்கலாம், வீட்டு மனைகள் வாங்கித் தருகிறோம் என பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி, காவல் துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவைத் தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்பட்டு மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக போலீசாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவாகிவிட்டார். அவரிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். மொத்தம் ரூ.20 கோடி வரை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பிரபுமணி மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஷீலா மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். நீதிமன்ற விசாரணையின் போது முன் ஜாமின் மனுவுக்கு காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை வாதிட்டது. இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடிமுதலீட்டு மோசடிமுன்ஜாமீன்ஷீலா மேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அயர்லாந்து தொடர் தோல்வி: சுப்மன் கில்லுக்கு ஆதரவாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
Next Article ரவி தேஜா நடித்த ‘இருமுடி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

You Might Also Like

மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் குறும்பட போட்டியில், சிறந்த படங்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசு வழங்கப்படவுள்ளதாக…

1 Min Read
தமிழ்நாடு

குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு: கிளாண்டர்ஸ் பரவல் எதிரொலி!

கிளாண்டர்ஸ் பாக்டீரியா பரவல் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவான குதிரைகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு.

1 Min Read
தமிழ்நாடு

மக்கள் தீர்ப்பை ஏற்க தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அறிவுரை

மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, தி.மு.க. ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டாட்சி தத்துவத்தை…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.55,900 பறிமுதல்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், 5 இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.55,900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?