கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

யூடியூபர் சவுக்கு சங்கரை கொலை செய்ய அருண் ஐபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், 'என்னை கொலை செய்ய மும்பையைச் சேர்ந்த கூலிப்படையை அருண் ஐபிஎஸ் அமைத்துள்ளார். இது குறித்து டெல்லி உளவுத்துறை அதிகாரிகள் எனக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். இந்தியாவில் யாருக்கும் நடக்காத அவலம் எனக்கு நடக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமும் அருண் என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார். என் சமையலறையில் மேசையில் மலத்தையும், சாக்கடையையும் வீசிய கொடுமை நடந்துள்ளது.

தற்போது சட்டம்-ஒழுங்கு பிரிவில் அருண் இருந்திருந்தால், என் மீது 15 வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். ஆனால் அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பதால், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக கூலிப்படையை நியமித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜயிடம் வலியுறுத்துவேன். அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கத் தகுதியில்லாத நபர். இதை நான் மட்டும் சொல்லவில்லை, சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் இது கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version