சேலம் மாநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! நெத்திமேடு மற்றும் மேட்டுப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (19-ஆம் தேதி) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் தடைபடும்.
சேலம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில், பூலாவரி மின் பாதையில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், கொண்டலாம்பட்டி, சின்ன கொண்டலாம்பட்டி, ரங்காபுரம், நெய்க்காரப்பட்டி, என்.மேட்டுத்தெரு, மற்றும் பூலாவரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.
இதேபோல், சேலம் மின் பகிர்மான வட்டம் மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெறுகின்றன. முத்தம்பட்டி மற்றும் வேப்பிலைப்பட்டி மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால், வேப்பிலைப்பட்டி, சேசன்சாவடி, திருமனூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளாளகுண்டம், காட்டு வேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் கூறியுள்ளார்.
எனவே, மின் விநியோகம் தடைபடும் நேரங்களில் பொதுமக்கள் சிரமமின்றி இருக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மின்தடையால் ஏற்படும் சிரமங்களுக்கு மின்வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.