சேலம் அருகே மின்னல் தாக்கி 15 ஆடுகள் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் ஓமலூரில் மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதையன் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த ஆடுகள் மீது மின்னல் தாக்கியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விவசாயி மாதையன் தனது தோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு, தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த செய்தி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த ஆடுகளை உடற்கூறாய்வு செய்தனர். பின்னர், அவை உரிய முறையில் புதைக்கப்பட்டன. மேலும், குண்டுகல் மற்றும் ஒலக்கூர் பகுதிகளில் பெய்த கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

இதனிடையே, காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, பெரியப்பட்டி, தளவாய்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக களத்தில் இறங்கி, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version