சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத சிறப்பு பூஜை

வைகாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக, உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (மே 14) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாத பூஜைகளுக்காக நாளை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.

வரும் மே 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை மாறி, ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மே 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த வைகாசி மாத சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு ஐயப்பனின் அருளைப் பெற ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version