உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தமாக வெற்றி பெற்றால், தனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமாகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால், ஒரு மேயர் இடத்திலாவது தமாக வெற்றி பெற்றால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இந்த சவாலை ஏற்க தமாக தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், முதல்வர் விஜய்க்கு ஆபத்து வந்தால் அதற்கு ஆதவ் அர்ஜூனாதான் காரணம் என்றும், இனி எந்த சூழலிலும் முதுகில் குத்திவிட்டு ஓடியவர்களை சேர்க்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றும், தொண்டர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் இடம்பெற்றுள்ள எந்த கூட்டணியிலும் திமுக இணையாது என்றும், ப.சிதம்பரம் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாகக் கூறியிருந்தாலும், திமுக காங்கிரஸை 'டைவர்ஸ்' செய்துவிட்டதாக ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார். சில கட்சிகள் திமுகவை விட்டுச் சென்றாலும், அவர்களுடன் கலந்தாலோசித்துவிட்டுச் சென்றதாகவும், அது ஒரு வகையான 'டைவர்ஸ்' என்றும், ஆனால் காங்கிரஸுடனான 'டைவர்ஸ்' வேறு வகையானது என்றும் அவர் விளக்கினார்.