டெல்லியில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் சிஜேபி அமைப்பு நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றபோது, போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். அப்போது, செய்தியாளர் ஒருவர் அங்கு நின்றிருந்த ஒரு சிறுவனிடம், போலீசாரின் தடியடிக்கு பயமாக இல்லையா? என்று கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன், 'சற்று கூட பயமில்லை' என்று உறுதியாகக் கூறுகிறான். 'இவ்வளவு சிறிய வயதில் இந்த தேசபக்தி எங்கிருந்து வந்தது?' என்ற கேள்விக்கு, 'பகத் சிங் தான் எனக்கு உத்வேகம்' என்று அச்சிறுவன் பதிலளிக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் கல்வித் துறையில் நிலவும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி சிஜேபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜூலை 20 முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் பல போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மேலும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் 20 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த விவகாரத்திற்குப் பல பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், ரித்திகா சஜ்தே நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், அந்தச் சிறுவனின் நேர்காணல் வீடியோவை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து தொடரின் போது செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து அவரது மனைவி வீடியோ பகிர்ந்து இருக்கிறார்.
டெல்லியில் கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, போராட்டக்கார சிறுவனின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறுவன் ஒருவர் போலீசாரின் தடியடிக்கு பயப்படவில்லை என்றும், பகத் சிங் தனக்கு உத்வேகம் என்றும் கூறியது பலரையும் கவர்ந்துள்ளது.

