MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2027 உலகக்கோப்பை: ரோஹித், கோலி ஆட்டம் அணி நிர்வாகம் கையில் – அஸ்வின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2027 உலகக்கோப்பை: ரோஹித், கோலி ஆட்டம் அணி நிர்வாகம் கையில் – அஸ்வின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 2027 உலகக்கோப்பை: ரோஹித், கோலி ஆட்டம் அணி நிர்வாகம் கையில் – அஸ்வின்

விளையாட்டு

2027 உலகக்கோப்பை: ரோஹித், கோலி ஆட்டம் அணி நிர்வாகம் கையில் – அஸ்வின்

Admin
Last updated: ஜூன் 11, 2026 3:21 மணி
Admin
Share
SHARE

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா இல்லையா என்பது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, ரோஹித் மற்றும் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதன்பின்னர், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் அவர்கள் விலகினர். தற்போது, இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் இவர்களது அதிரடி ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இது குறித்து அஸ்வின் கூறுகையில், 'அணி நிர்வாகம் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்த இரு மூத்த வீரர்களையும் பயன்படுத்த விரும்பினால், அவர்களது அனுபவத்தை மிகச் சரியாகப் பயன்படுத்த முடியும். ஆனால், நிர்வாகத்தின் எண்ணம் வேறு திசையில் இருந்தால், வீரர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். முறையான உடற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் மூலம் இவர்களது உடற்தகுதியை எளிதாகப் பராமரிக்க முடியும். இறுதி முடிவு அணி நிர்வாகத்தின் கைகளில் தான் உள்ளது' என்றார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் ரோஹித் மற்றும் கோலி தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் 616 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். மேலும் அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். ரோஹித் சர்மா 409 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். இவரும் தொடர் நாயகன் விருதை வென்றார். தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் தங்களை நிரூபித்துள்ள இந்த மூத்த வீரர்களை 2027 உலகக் கோப்பைக்கு அழைத்துச் செல்வதா அல்லது முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்புவதா என்பதை பிசிசிஐ-யும், அணி நிர்வாகமும் தான் முடிவு செய்ய வேண்டும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketWorld Cupஅஸ்வின்உலகக்கோப்பைகிரிக்கெட்ரோஹித் சர்மாவிராட் கோலி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டி.எம்.சி. எம்.பி. ராஜினாமா: மம்தாவுக்கு தொடரும் நெருக்கடி
Next Article பெண்கள் பாதுகாப்பு: முதல்வர் விஜய்க்கு அக்கறை உள்ளதா? – உதயநிதி கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: 24 வீரர்கள் தற்காலிக நீக்கம்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த கிரிக்கெட் வீரர் லால்வானி மற்றும் ஆசிய பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அஜித் உட்பட 24 வீரர்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
விளையாட்டு

25 பந்துகளில் ஹர்மன்பிரீத் அரைசதம்: கோலி நேரில் வந்து உற்சாகப்படுத்தினார்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 இறுதி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 170 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 25…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: இந்த வீரர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் பிரின்ஸ் யாதவ் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா…

3 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: க்ருணாலின் பந்துவீச்சு.. காவ்யா மாறன் ரியாக்‌ஷன் வீடியோ வைரல்!

ஐபிஎல் 2026 போட்டியில் க்ருணால் பாண்டியா வீசிய வித்தியாசமான பந்துவீச்சைக் கண்டு ஹைதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் அதிர்ச்சியடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?