ஐபிஎல்: பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு அதிரடி துவக்கம் கிடைத்தது. வெங்கடேஷ் ஐயர் 73 ரன்களும், விராட் கோலி 58 ரன்களும் குவித்தனர். இறுதியில் டிம் டேவிட் அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிகள் காத்திருந்தன. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பஞ்சாப் அணி 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்டோய்னிஸ் 37 ரன்களும், ஷஷாங் 56 ரன்களும் சேர்த்தாலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இறுதியாக, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version