விஜய் உயிருடன் இருக்கமாட்டார்: ஆர்.பி.உதயகுமார் கொலை மிரட்டல்

அதிமுக முக்கிய தலைவர் ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவில் முக்கிய தலைவர்கள் பலரும் இருக்கும் சூழலில், மதுரை மாவட்டத்தில் தேர்தல் களத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், அங்குள்ள 10 தொகுதிகளில் 8 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தவெகவில் தனக்கு இடம் கிடைக்காது என்ற விரக்தியில், தினமும் காலையில் எழுந்து வீடியோ வெளியிட்டு புலம்பி வருகிறார் என தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜயைப் பாராட்டிப் பேசும் அமைச்சர்கள், விஜய் இந்தியாவின் பிரதமராக மட்டுமல்ல, அமெரிக்காவிற்கே ஜனாதிபதியாகக் கூட வருவார் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகவும், சீன அதிபராகவும், இங்கிலாந்தின் இளவரசராகவும், தென்கொரியாவின் அதிபராகவும் கூட வருவார் என்று விஜயின் அமைச்சர்களுக்கு எந்த வாய்பூட்டு சட்டமும் கிடையாது என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

ஆனால், அதிமுகவில் பிள்ளை பிடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்யும் நீங்கள், 'நான் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நான் தான் புரட்சித் தலைவி அம்மா, தவெக ஆட்சி தான் அதிமுக ஆட்சி' என்று அதிமுகவின் அப்பாவி தொண்டர்களையும், உண்மையான விசுவாசிகளையும் ஏமாற்றி, அதிமுகவை அபகரிக்கவோ அல்லது அழிக்கவோ முயற்சி எடுப்பது, எங்களது கடைசி விசுவாசி தொண்டன் இருக்கும் வரை நடக்கவே நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படியே மோசடி செய்து, அதிமுகவை அழிக்கும் நிலை ஏற்பட்டால், அதிமுகவின் விசுவாசிகள் மற்றும் உண்மையான தொண்டர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்றும், அப்படி இல்லையென்றால் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவில் அந்நியர்கள் படையெடுத்து, அபகரிக்க முற்பட்டால், குடும்பத்திற்கு ஒருவர் வெற்றி திலகமிட்டு, வீர திலகமிட்டு தற்கொலைப் படையாகப் புறப்பட்டு புரட்சியை நிகழ்த்திக் காட்டுவதற்கு எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆசி எங்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version