சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாதவரம், ஆர்.ஏ.புரம், வடபழனி, பெரம்பூர், நுங்கம்பாக்கத்தில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல விம்கோ நகர், வளசரவாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம், அண்ணா நகரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எழும்பூர், வேப்பேரி, தி.நகர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version