8 மாவட்டங்களில் இன்று மதியம் வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மற்ற மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version