பஞ்சாபில் போலீஸ் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், மஜிதா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஹம்ஜா கிராமத்திற்கு அருகே பணியில் இருந்த போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த துயரச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. கணிகே பங்கர் கிராமத்தைச் சேர்ந்த ஏஎஸ்ஐ ஜோகா சிங், தனது ஸ்கூட்டரில் போலீஸ் சீருடையில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது. ஃபதேகர் சுரியன்-மஜிதா சாலைக்கு அருகே காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன், மஜிதா காவல் நிலையத்தின் எச்.ஓ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை விரிவாக ஆய்வு செய்தனர். பின்னர், ஜோகா சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கொலையாளிகளைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அமிர்தசரஸ் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சுஹைல் மிர் காசிம் கூறுகையில், 'ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏஎஸ்ஐ ஜோகா சிங்கின் உடல் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. உடனடியாக நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம்' என்று தெரிவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version