MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 6, 2026 1:01 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் பொன்முடி
முன்னாள் அமைச்சர் பொன்முடி
SHARE

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கள் பெரும் எதிர்ப்பை கிளப்பியதோடு, அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதியன்று பொன்முடி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் என்பவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பொன்முடியைத் தண்டிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, பின்னர் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக, தனக்கு எதிராகப் பதியப்பட்ட இந்த தனிநபர் புகாரை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஜூலை 2 அன்று வழங்கினார். வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம், உமா ஆனந்தன் தாக்கல் செய்த தனிநபர் புகாரில் நீதிமன்றம் தலையிட மறுத்து, பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்தது.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி நேரில் ஆஜராகாததால், நீதிபதி சவுந்திர பாண்டியன் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார். வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பொன்முடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai CourtHigh CourtPonmudiWarrantஉயர் நீதிமன்றம்சென்னை நீதிமன்றம்பிடிவாரண்ட்பொன்முடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் நபர் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய எளிய வழி
Next Article இருசக்கர வாகனத்தில் லேப்டாப்பை பயன்படுத்தும் இளைஞர் உயிரைப் பணயம் வைத்து லேப்டாப்பில் வேலை பார்த்த இளைஞர்: வைரல் வீடியோ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் மாணவர்கள் அரசு பணி தேர்வு முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஜார்க்கண்ட் அரசு பணி தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டம் 12வது நாள்

ஜார்க்கண்ட் அரசு பணி நியமனத் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி மாணவர்கள் நடத்தி…

ஆகஸ்ட் 6, 2026

வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மங்களூருவில் வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன்…

ஆகஸ்ட் 6, 2026

அவதூறு, ஆபாச கருத்துகள்: சட்டங்கள் என்ன சொல்கின்றன?

இந்தியாவில் அவதூறு மற்றும் அநாகரிகமான பேச்சுக்கள் குற்றமா?…

ஆகஸ்ட் 6, 2026

Old Monk, McDowell’s உள்ளிட்ட மதுபானங்களுக்கு FSSAI தடை

Old Monk, Antiquity Blue, Royal Challenge…

ஆகஸ்ட் 6, 2026

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி ஆன்லைன் போராட்டம் தீவிரம்

இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆன்லைன் மற்றும் களத்தில் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமெரிக்க பெண்ணை கரம் பிடித்த திண்டுக்கல் வாலிபர்: தமிழ் முறைப்படி திருமணம்

திண்டுக்கல்லைச் சேர்ந்த சாம்ராட் என்ற இளைஞர், அமெரிக்காவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பியாங்காவை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம்…

1 Min Read
மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் லோகோ
தமிழ்நாடு

மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதை சரிசெய்ய ஐ.ஆர்.சி.டி.சி. தனது இணையதளத்தை மேம்படுத்தி புதிய வடிவமைப்புடன் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நீலகிரியில் சாலையை கடந்து சென்ற புலி: வாகன ஓட்டிகள் பீதி

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சீகூர் பகுதியில் நேற்று இரவு சாலையைக் கடந்த புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வனப்பகுதி நிறைந்த சாலையில் புலி நடமாட்டம் காணப்பட்டது.

1 Min Read
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி
தமிழ்நாடு

வங்கி மேலாளரை அறைந்த அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப்பதிவு

சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க. அழகிரியின் மகள் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லிப்ட் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?