பரந்தூர் விவசாயிகளின் நன்றி: முதல்வர் விஜய்க்கு ‘விஜய் சாலை’ பெயர் சூட்டல்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததை அடுத்து, முதலமைச்சர் ஜோசப் விஜயை ஏகனாபுரம் விவசாயிகள் நேரில் சந்தித்து தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, முதலமைச்சருக்கு பச்சைத் துண்டு அணிவித்து, நெற்கதிர் மற்றும் கிராம தேவதைகளின் புகைப்படங்களை பரிசாக வழங்கினர்.

முதலமைச்சர் விஜயை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பரந்தூர் விவசாயிகள், 'எங்கள் ஊரைக் காத்துக்கொண்ட காவல் தெய்வமாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார். விவசாய மக்களையும், நமது பண்பாட்டையும் காத்து நிற்கும் எங்கள் காவல் தெய்வமான முதலமைச்சர் விஜய்க்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், 'பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுமாறு நாங்கள் மன்றாடிக் கேட்டோம். அமைச்சர் உதயநிதியை சந்திக்கும் வாய்ப்பு கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், முதலமைச்சர் விஜய், தான் முதல்வரானால் இந்த திட்டத்தை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி அளித்து, அதை நிறைவேற்றியுள்ளார். பரந்தூர் விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றிய தலைவருக்காக, எங்கள் பிரதான சாலைக்கு “விஜய் சாலை” எனப் பெயர் சூட்டியுள்ளோம்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version