ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணைய முடிவு: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறாரா?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு முக்கிய செய்தியாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். இது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஒற்றைத் தலைமைப் பிரச்சினை எழுந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவை தொடங்கி, மீண்டும் அதிமுகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்து வந்தார்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்ட போதிலும், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். மேலும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைந்தனர். எம்.பி. தர்மர் எடப்பாடி பழனிசாமியிடமும், பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி ஒன்றையும் தொடங்கிவிட்டனர்.

இந்த அரசியல் சூழ்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில், கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, அவரை மு.க. ஸ்டாலின் கட்டித்தழுவி, திமுக துண்டு அணிவித்து வரவேற்றார். தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், வேறொரு கட்சியில் இணைவது இதுவே முதல் முறையாகும்.

திமுகவில் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை எந்த முக்கிய பதவியும் வழங்கப்படவில்லை. வரவிருக்கும் தேர்தலில் திமுக தோல்வியடைந்தால், தனது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று அவர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைவதே சிறந்தது என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தனது தந்தையிடம் ஆலோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரை ரவீந்திரநாத் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில், ஓ.பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர் போட்டியிட்ட அதே தொகுதியில், த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version