ஒஹாயோ மாநிலம் டொலிடோவில் உள்ள Old West End திருவிழாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
நிகழ்வின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி, துப்பாக்கிச்சூடாக மாறியுள்ளது. இதில் 12 பேர் குண்டடிப்பட்டு காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

