பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய நொய்டா பெண் மன்னிப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் ருச்சிதா சிங்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷங்களை எழுப்பிய நொய்டா பெண், தற்போது தான் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தாக்கப்பட்டதாகவும், அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

போராட்டத்தின்போது, தேசவிரோத கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், ஒரு பெண் நேரலை ஒளிபரப்பில் பிரதமர் மோடியை மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேச்சு, சட்டப்படி குற்றமாகும்.

போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சலூன் கடையில் வேலை செய்யும் ருச்சிதா சிங் (25 வயது) என்பது தெரியவந்தது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவரும் அவரது குடும்பத்தினரும் மூன்று நாட்களாக தலைமறைவாக இருந்தனர்.

இந்த அருவருக்கத்தக்க மற்றும் சட்டவிரோத பேச்சுக்காக நொய்டா போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு டெல்லி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நொய்டாவில் பதுங்கியிருந்த ருச்சிதா சிங்கை போலீசார் நேற்று விசாரித்தனர்.

விசாரணையின் போது, ருச்சிதா சிங் ஒரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு கோரினார். அதில் அவர், 'போராட்டத்தின்போது சிலரின் தூண்டுதலால் பிரதமர் மோடிக்கு எதிராக பல மோசமான கருத்துக்களைக் கூறிவிட்டேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. நான் பல மோசமான விஷயங்களைப் பேசிவிட்டேன். இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறு. ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

வாய் கொழுப்பில் பேசியதாகக் கூறப்படும் இந்த பெண், தற்போது தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version