தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடன் வாங்குவது தவறில்லை. ஆனால், வாங்கிய கடனை வெறுமனே நலத்திட்டங்களுக்குச் செலவிடுவது தவறு. கடனை அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். கடனில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். கல்வி, வேலைவாய்ப்புக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
மேலும், 'சட்டசபையில் அரசியல் விமர்சனம் செய்யாமல் வேறு எங்கே செய்வது? முதல்வர் விஜய் குட்டி கதை சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளுங்கட்சியும் பேசட்டும். இதில் எந்தத் தவறும் இல்லை!' என்று அவர் குறிப்பிட்டார்.
முதல்வர், மத்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்று கூறியதை வரவேற்றுள்ள நிர்மலா சீதாராமன், 'மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம்' என தவெக கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும், தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.