நாடு முழுவதும் நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக, சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
சேலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, சின்ன திருப்பதி ஜெயராம் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நிலையில், மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், சின்னசேலம்-சேலம் மற்றும் திருப்பத்தூர்-சேலம் இடையே இயக்கப்படும்.
சின்னசேலத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் 11.20-க்கு சேலம் சென்றடையும். திருப்பத்தூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் ரயில் 10.45-க்கு சேலம் வந்தடையும். இந்த சிறப்பு சேவையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.