MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை!

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை!

Admin
Last updated: மே 17, 2026 4:59 மணி
Admin
Share
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி தனது பதிவில், '2024 ஆம் ஆண்டில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது, ஆனால் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, கல்வி அமைச்சரும் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், 2026 ஆம் ஆண்டில் மீண்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்பட்டது, ஆனாலும் கல்வி அமைச்சர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. மீண்டும் சிபிஐ விசாரித்து வருகிறது, மற்றொரு குழு அமைக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியை நோக்கி சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

'ஏன் மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவுகள் நடக்கின்றன? இந்த 'தேர்வு வினாத்தாள் கசிவு விவாதம்' குறித்து ஏன் மீண்டும் மீண்டும் மவுனம் காக்கிறீர்கள்? மீண்டும் மீண்டும் தோல்வியடையும் கல்வி அமைச்சரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை?' என்று ராகுல் காந்தி ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த கசிவு குற்றச்சாட்டுகளால் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மனிஷா குருநாத் மந்தாரேவை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைக்காக 14 நாட்கள் காவலில் வைக்கக் கோரியுள்ளது.

மனிஷா குருநாத் மந்தாரே, தேசிய தேர்வு முகமையின் (NTA) குழு உறுப்பினராகவும், தேர்வு செயல்முறை நிபுணராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் நீட்-யுஜி தேர்வு கணினி முறையில் நடத்தப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamPaper LeakRahul Gandhiகல்வி அமைச்சர்நீட் தேர்வுராகுல் காந்திவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திரைத்துறைக்கு ராஜ்மோகன்? அமைச்சர் பதவி குறித்து நடிகர் விஷால் கருத்து!
Next Article மத்தியப் பிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயங்கர தீ விபத்து – பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: 40,000 உறுப்பினர்களுடன் புதிய கட்சி உதயம்!

இந்தியாவில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது. வெறும் சில நாட்களில் 40,000 உறுப்பினர்களைச் சேர்த்துள்ள இக்கட்சியில், பிரபல அரசியல் தலைவர்களும் இணைய…

2 Min Read
இந்தியா

பெங்களூரு மெட்ரோவில் தொடரும் கோளாறுகள்: விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு மெட்ரோ ரயில்களில் அடிக்கடி ஏற்படும் கோளாறுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் கோரிக்கையைத் தொடர்ந்து…

1 Min Read
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வுக்காக, மாணவர்களின் மனநலனை காக்க தமிழ்நாடு அரசு 14416 மற்றும் 104 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளது. மனநல ஆலோசனைகள் தொலைபேசி மூலம்…

1 Min Read
இந்தியா

டெலிகிராம் தடை சர்ச்சை: நீட் தேர்வு விவகாரத்தில் ராகுல், கெஜ்ரிவால் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடுமையாக…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?