வயது ஏற ஏற பலருக்கும் முகத்தில் கருமை நிற திட்டுகள் தோன்றி, பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சியளிக்கும். இந்த கருமையை போக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் விரிவாக காண்போம்.
முதலில், முகத்தில் உள்ள கருமையை போக்க எலுமிச்சை சாற்றை சம அளவு நீருடன் கலந்து, கருமையான சருமத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். எலுமிச்சை சாறு பயன்படுத்திய பிறகு, சிட்ரிக் அமிலத்தால் ஏற்படும் வறட்சியை தடுக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியம்.
மேலும், ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை நிறம் மாறும். அடுத்ததாக, 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, பால், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் சரும கருமை அகன்று வெண்மையாக மாறும்.
இறுதியாக, முகத்தின் கருமை போக்க 1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து கலந்து, கருமையான பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறைகளால் சரும கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.