திமுகவிடம் சமரசமாக போனதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'மருத்துவ கல்லூரி தொடங்க விண்ணப்பித்திருந்தேன் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார். அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் பதவியை விடுவதற்கு தயாரா?' என வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், '1991ஆம் ஆண்டிலிருந்து செங்கோட்டையனை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். அவர் எப்போதுமே தனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனையில் தலையை விட்டு மாட்டுக்கொள்வார்' என விமர்சித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஒரு காலத்தில் நேர்மையாக இருந்தார்கள், தற்போது சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்டனர். தினமும் சினிமாக்காரர்களை சந்தித்து பேசி மகிழும் உங்களுக்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா? அல்லது மனமில்லையா? கரூரை கைகழுவி விட்டதுபோல அம்மோனியா வாயு உயிரிழப்பு சம்பவத்தையும் புறக்கணிக்கிறீர்களா விஜய் அவர்களே? அப்பாவைக் காணவில்லை என்று தேடுகிறார்கள்.'
சட்டமன்றத்தில் வசனம் பேசுவது தேவையற்றது என்றும், சட்டமன்றத்தில் சினிமா போல வசனங்கள் பேசுவது அநாகரீகமான செயல் என்றும், இப்படி சைகை காட்டுவது கண்டனத்திற்குரியது என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். 'போன ஆட்சியில் அணில் வந்ததால் மின்சாரம் தட்டுபாடு என்றார்கள். இந்த ஆட்சியில் குரங்கு வந்துவிட்டதால் மின்சாரம் தட்டுபாடு என்கிறார்கள். மக்களின் நலன் தான் முக்கியம் என்பது புரியவில்லை' என்றும் அவர் விமர்சித்தார்.