மாரத்தான் ஓடிய சிறுமிகளுக்கு முதலுதவி செய்த தனது செயலை, உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் திமுக ஐடி விங் பதிவு செய்திருப்பதாக அமைச்சர் விஸ்வநாதன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'கடும் வெயிலால் மாரத்தான் போட்டியில் மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயங்கிய சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி முதலுதவி செய்தேன். திமுக இழிவான பதிவுகளை வெளியிட்டு தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறது. எக்காலத்திலும் விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது. தலித் சமுதாய பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கும் என்னை குறிவைத்து சகித்துக் கொள்ள முடியாத வகையில் பதிவு போட்டு, திமுக ஐடி விங் தங்களது தரத்தை தாழ்த்திக் கொள்கிறது. கோயபல்ஸ் பிரசாரத்தை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகம்' என அவர் கூறினார்.
முன்னதாக, மதுரை மேலூரில் மாரத்தான் ஓடிய சிறுமிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சரண்யா நடராஜன், தமிழ்நாடு டிஜிபி மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜிக்கு புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் விஸ்வநாதன் தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். மாரத்தான் போட்டியில் மாணவர்கள் மயக்கம் அடைந்தபோது, மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு முதலுதவி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது செயலை தவறாக சித்தரித்து, உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளதாகவும், இது தரம் தாழ்ந்த அரசியல் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.