MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தோற்ற தொகுதியில் நன்றி சொன்ன அமைச்சர்: நெட்டிசன்கள் கிண்டல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > தோற்ற தொகுதியில் நன்றி சொன்ன அமைச்சர்: நெட்டிசன்கள் கிண்டல்!
லைஃப் ஸ்டைல்

தோற்ற தொகுதியில் நன்றி சொன்ன அமைச்சர்: நெட்டிசன்கள் கிண்டல்!

Admin
Last updated: June 6, 2026 11:34 am
Admin
Share
SHARE

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ரீநாத், தான் போட்டியிடாத தொகுதியில் நன்றி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மே 29ஆம் தேதி, திருச்செந்துார் வைகாசி விசாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், ஆறுமுகனேரி அருகே உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, புன்னக்காயல் மீனவ கிராமத்தில் த.வெ.க.,விற்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், அங்கு சென்று நன்றி தெரிவித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அழைப்பை ஏற்று புன்னக்காயல் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், திறந்த வேனில் நின்றபடி, 'அதிக ஓட்டு வித்தியாசத்தில் என்னை ஜெயிக்க வைத்த இந்த ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்' என பேசினார். ஆனால், புன்னக்காயல் கிராமம் திருச்செந்துார் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. அந்த தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க., வேட்பாளர் முருகன் தோல்வியடைந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத் எந்த ஊரில், எந்த தொகுதியில் இருக்கிறார் என்பதே தெரியாமல் நன்றி கூறியதாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 'தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர், பக்கத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் ஓட்டு போட்ட மக்களுக்கு யார் எம்.எல்.ஏ. என்றே தெரியாது. இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்' என விமர்சித்துள்ளார்.

மேலும், 'தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் அனுபவம், வரலாறு, போராட்டம், தியாகம், பிரச்சனைகள், நிர்வாகம், தொகுதி, தொகுதி மக்கள், அவர்களின் உரிமை, எதிர்பார்ப்பு, ஆளுமை, அதிகாரம், அரவணைப்பு என எதுவுமே தெரியாது. தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதில் ஒரு நாள் தாமதித்தால் என்ன ஆகும் என்பதை தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. எதுவுமே தெரியாது, ஆனால் மக்களை ஏமாற்ற மட்டும் விஜய்க்கு தெரியும். விஜய் ஆட்சியில் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? காலம் தான் இதற்கு தீர்வு சொல்லும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர்தமிழக அரசியல்தவெகதிருச்செந்துார்தூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மிதுனம் ராசி: 6 ஜூன் 2026 – இன்றைய ராசிபலன்
Next Article அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்: 2026ல் 1,076 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்: கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தப்படும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வெங்காயம் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

மத்திய அரசு வெங்காயத்தின் கொள்முதல் விலையை கிலோ ரூ.16.50 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு விவசாயிகளின் வருவாயை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

2026-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா!

2026-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா உருவெடுத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான 'அனிமல்', 'புஷ்பா-2', 'சாவா' படங்கள் அதிக வசூலை ஈட்டி, ரசிகர்களிடையே பெரும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சுடுகாடு அருகே டாஸ்மாக்: நடிகர் பார்த்திபன் கோரிக்கை

டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும். அதற்கு பதிலாக சுடுகாடு அருகே கடைகளை திறந்தால் குடிமகன்களுக்கு அச்சம் ஏற்படும் என நடிகர் பார்த்திபன் முதலமைச்சர் விஜயிடம் யோசனை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?