அமைச்சர் சரத்குமார் ‘Thug Life Moment’ ஸ்டேட்டஸ்: சர்ச்சையில் சிக்கிய வீடியோ

2 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அமைச்சர் சரத்குமார் தனது செல்போன் திரையில் ஒரு வெள்ளை நிற பொடியை வைத்து, கிரெடிட் கார்டு கொண்டு மெல்லிய கோடு போல அமைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், அவரது மற்றொரு கையில் 500 ரூபாய் நோட்டும் காணப்படுகிறது.

இந்த வீடியோ உயர் ரக போதை வஸ்து என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் சரத்குமாரின் மனைவி முதலில், 'நாங்கள் எடுத்த வீடியோ தான் அது' என ஒப்புக்கொண்டு, 'குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரையைத்தான் அப்படி நுணுக்கிக் கொண்டிருந்தார்' என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா என்றும், அப்படிச் சென்றாலும் செல்பி புகைப்படத்திலோ அல்லது வீடியோவிலோ குழந்தையைக் காணவில்லையே என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வீடியோவில் மொத்தம் 4 பேர் உள்ளனர், ஆனால் குழந்தையைக் காணவில்லை. மேலும், இந்த வீடியோவுடன் 'Thug Life Moment' என்ற ஸ்டேட்டஸையும் அமைச்சர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வைரலாகும் இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் சரத்குமார் தரப்பிலிருந்து இது குறித்து மேலும் அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வரவில்லை. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version