கடற்கரையில் அமைச்சர் சரத்குமார் மது அருந்தும் புதிய வீடியோ வைரல்!

மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்குமார் கடற்கரையில் மது அருந்தும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் குழந்தையின் மாத்திரை என விளக்கம் அளித்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சியான திமுக, அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புதிய வீடியோவில், அமைச்சர் சரத்குமார் கடற்கரை ஓரத்தில் அமர்ந்து மது அருந்துவது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

முந்தைய சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த வீடியோ வெளியானது, அமைச்சர் சரத்குமார் மீது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version