தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

மின்​துறை​யில் இனி​மேல் தனி​நபர்​கள் அல்லது ஒரு குறிப்​பிட்ட நிறு​வனத்​துக்கு சாதக​மாக டெண்​டர் வழங்​கும் நடை​முறை தொட​ராது என்றும், தகு​தி​யுள்ள அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ஒப்​பந்​தப் பணி​கள் சம வாய்ப்புட​ன் வழங்​கப்​படும் என்றும் மின்​துறை அமைச்​சர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று மின்​துறை சார்ந்த விநி​யோக நிறு​வனங்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் ஒருங்​கிணைப்பு கூட்​டம் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில், மின்​வாரி​யத்​துடன் தொடர்​புடைய ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஒப்​பந்​த​தா​ரர்​கள், மின் உபகரண விநி​யோகஸ்​தர்​கள், வழங்​குநர்​கள், கொள்​முதல் நிறு​வனங்​களைச் சேர்ந்​தவர்​கள் பங்கேற்றனர். விரி​வான கலந்​துரை​யாடல் நடை​பெற்​றது.

கூட்டத்தில் பேசிய அமைச்​சர் நிர்​மல்​கு​மார், 'மின்​துறை​யின் ஒவ்​வொரு பிரி​விலும் தனித்​தனி குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, டிஜிட்​டல் போர்ட்​டல் மூல​மாக வெளிப்​படை​யான டெண்​டர் முறை அமல்​படுத்​தப்​படும். தகு​தி​யுள்ள அனை​வருக்​கும் சம வாய்ப்பு வழங்​கப்​படும். கடந்த ஆட்​சி​யில் தனி​நபர்​கள் அல்​லது ஒரு குறிப்​பிட்ட நிறு​வனத்​துக்கு சாதக​மாக டெண்​டர் வழங்​கிய​தாக ஒப்​பந்​தா​ரர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். அது இனி தொட​ராது. இந்த ஆட்​சி​யில் இடைத் தரகர்​கள், முறை​கேடு​களுக்கு இடமில்​லை. இனிவரும் காலங்​களில் வெளிப்​படை​யான நிர்​வாகத்​தின் அடிப்​படை​யில், தகு​தி​யுள்ள அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ஒப்​பந்​தப் பணி​கள் வழங்​கப்​படும்' என்று தெரி​வித்​தார்.

மேலும், 'இன்​னும் ஓராண்​டுக்​குள் மின்​துறை​யில் முழு​மை​யான சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, நஷ்டங்​களைக் குறைத்​து, லாபகர​மாக இயக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​படும்' என்​றார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'கோவை சிறுமி கொலை வழக்​கில் உடனடி​யாக நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார். எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் முதலில் வீட்​டில் இருந்து வெளியே வர வேண்​டும். இன்​ன​மும் அவரது தந்​தை​யின் ஆட்சி நடப்​ப​தாக நினைத்​துக் கொண்​டிருக்​கிறார். ஆட்சி மாற்​றம் வேண்​டும் என்று மக்​கள் நினைத்​த​தால்​தான் தவெக​வுக்கு வாக்​களித்​துள்​ளனர்' என்​றார்.

கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version