மேகேதாட்டு திட்டத்தை காங்கிரஸ் தடுக்கும்: கனிமொழி நம்பிக்கை

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். மேற்கு மண்டலம் முதல் தஞ்சை டெல்டா வரை தமிழ்நாட்டின் பாதியை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை, திமுக ஆட்சியில் இருந்தபோது தடுத்து நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த காவிரிப் பிரச்சினையில் தலையிட்டு மேகேதாட்டு திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் என்று நம்புவதாக கனிமொழி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு மேகேதாட்டு திட்டத்தை நிறுத்தும் என திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version