MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்: அமைச்சர் அருண்ராஜிடம் பதில் இல்லை – அண்ணாமலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்: அமைச்சர் அருண்ராஜிடம் பதில் இல்லை – அண்ணாமலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்: அமைச்சர் அருண்ராஜிடம் பதில் இல்லை – அண்ணாமலை

தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்: அமைச்சர் அருண்ராஜிடம் பதில் இல்லை – அண்ணாமலை

Admin
Last updated: ஜூலை 8, 2026 7:36 மணி
Admin
Share
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
SHARE

தமிழகத்தில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில், மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் இன்னும் பதிலளிக்காத ஒரு மிக முக்கியமான கேள்வி இருப்பதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறப்படும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது? போன்ற கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது என்றும், இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்-க்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பு நிறுவனர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:7.5% உள் ஒதுக்கீடுAnnamalaiDeemed UniversityMedical CollegeMinister ArunrajTamil Nadu Govtஅண்ணாமலைஅமைச்சர் அருண்ராஜ்தமிழக அரசுநிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்மருத்துவ இடங்கள்மருத்துவக் கல்லூரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தி.மு.க. எம்.பி. கனிமொழி தமிழ்நாட்டில் காவல்துறை இருக்கிறதா? – கனிமொழி எம்.பி. கேள்வி
Next Article சேலம் மாநகராட்சி குடிநீர் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து சேலம் மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியர்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு: காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த ஊழியர் கைது!

அயோத்தி ராமர் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி, காதலிக்கு ஐபோன் வாங்கி…

ஜூலை 8, 2026

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு…

ஜூலை 8, 2026

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலில்…

ஜூலை 8, 2026

மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது

சென்னையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர் மீது…

ஜூலை 8, 2026

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில்…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் மெகா ஆய்வு: ஜூலை 22 வரை தொடரும் முக்கிய கூட்டங்கள்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று முதல் ஜூலை 22 வரை அனைத்து 35 துறைகளின் செயல்பாடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு…

2 Min Read
அரசியல்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை – முதல்வர் விஜய் அதிரடி

பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கோவை சிறுமி கொலை சம்பவத்தை அடுத்து ஆய்வுக்…

1 Min Read
தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ மீண்டும் விசாரணை தொடங்கியது

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், சட்டசபை தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஐ விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே ஜென் Z திமுக நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?